சென்னை:கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு, முதலில் மாவட்ட அளவிலும், பின் மாநில அளவிலும், தொடர்ந்து தேசிய அளவிலும் நடத்தப்படும். மாவட்ட அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட், பள்ளிகளில் நாளை முதல் கிடைக்கும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களது கடவு எண்ணை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை