தொலைநிலை கல்வி வழங்கும் பல்கலைகள், படிப்பு மற்றும் அங்கீகார விபரத்தை, இணையதளத்தில் வெளியிட, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவு பிறப்பித்துள்ளது.யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்று, பல்கலைகள் தொலைநிலை படிப்புகளை நடத்துகின்றன.
சில பல்கலைகள், தனியார் மூலம் மையங்கள் நடத்துகின்றன; இதற்கு, யு.ஜி.சி., அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில், நடப்பு ஆண்டில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் ஹிந்தி பிரசார சபாவுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல பல்கலைகள், தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கையை துவக்கியுள்ளன.
எனவே, மாணவர்கள் ஏமாறாமல் இருக்க, யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 'அனைத்து பல்கலைகளும், தங்களின் படிப்பு விபரங்கள் மற்றும் அதற்கான அங்கீகார கடிதத்தை, பல்கலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை பார்த்து உறுதி செய்த பின், மாணவர்கள், அந்த பல்கலையில் சேரலாம்' என, தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை