அரசுப் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தில், மாணவியருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவும், பாதுகாப்பை பேணும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவியருக்கு, நடப்பாண்டில் இருந்து தற்காப்பு கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் துவங்கி, டிசம்பர் வரை பயிற்சி அளிக்கப்படும்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மூலம், பெண் பயிற்றுனர்களை தேர்வு செய்து, உடனடியாக பயிற்சியை துவங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து, ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகன் கூறுகையில்,''ஈரோடு மாவட்டத்தில், 34 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது; விரைவில் பயிற்சி துவங்கும்,'' என்றார்.பெண் பயிற்றுனர்கள் மூலம், பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அத்தனை பேர் கிடைப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதுவும், இந்த மாதமே பயிற்சி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காப்பு கலை பயிற்சி பெயரளவுக்கே இருக்கும் என்று, பெற்றோர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை