தகுதியும், திறமையும் உள்ள சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் உரிமம் வழங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா கைடுகளுக்கான உரிமம் புதுப்பித்து கொடுப்பது வழக்கம்.
பல இடங்களில் இந்த கைடுகளின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை. இது தொடர்பாக வௌிநாட்டு பயணிகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்துள்ளனர். இதனை தொடந்து தகுதியும், திறமையும் உள்ள நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கினால் போதும் என அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இது தொடர்பாக நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. தென்மாவட்ட அளவில், 110 கைடுகள் பங்கேற்கும் நேர்காணல் நேற்று மதுரையில் நடந்தது.
இதில் அவர்களின் மொழி அறிவு மற்றும் சுற்றுலா தலங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமம் வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை