பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம் வழங்குகிறது.
புதிய பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறையும், மூன்று ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அங்கீகாரம் தரப்படும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளின் படி, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளாக, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிகளுக்கு, ஓராண்டு அங்கீகாரம் தரப்படுகிறது; ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இது, தனியார் பள்ளிகளுக்கு, கடும் அவதியாக உள்ளதால், 10 ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். இந்த மனு, மெட்ரிக் இயக்குனரின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மனுவை பெற்ற மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மனுதாரருக்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், 'நிரந்தர அங்கீகாரம் தொடர்பாக, தனியார் பள்ளிகள், தனித்தனியாக மனு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார். அதனால், அனைத்து தனியார் பள்ளிகளும், தனியாக மனு அனுப்ப முடிவு செய்துள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை