இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன்மூலம் மத்திய அரசின்அனைத்துச் சலுகைகளும் முறையாக சென்றடைவதற்கும் மக்கள் தொகையை எளிதில் கணக்கெடுப்பதற்கும் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
இதன்படி, இனி தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மக்களுடைய ’பயோ மெட்ரிக்’ தகவல்களைச் சேகரித்து, அந்தத் தகவலை ஆதார் ஆணையமான UIDAI -யிடம் வழங்கியபின்னர் அத்துறை ஆதார் அட்டைகளை மக்களுக்கு வழங்கும்.2015ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் 7 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரத்து 852 பேர் வசிக்கின்றனர். இதில், கடந்த செப்டம்பர் 20ஆம்தேதி நிலவரப்படி 6 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 998 பேருக்கு இன்னும் ஆதார் வழங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை