குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாளாகும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப, வரும் நவம்பர் 6 -ஆம் தேதிதேர்வு நடைபெறவுள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானகாலக்கெடு புதன்கிழமையுடன் (செப்.14) முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், விண்ணப்பித்தவர்கள்தேர்வுக் கட்டணம் செலுத்த வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலமாக தேர்வுக் கட்டணமான ரூ.75-ஐ செலுத்த வேண்டுமென டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்திலேயே வெளியிடப்படும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை