பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள், அரசு குழுவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக அரசு பணியாளர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது; இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு சமமானத் தொகையை, மாநில அரசு, தன் பங்காக, அளிக்கும். இத்தொகை, அரசால் நியமிக்கப்படும், நிதி மேலாளர் வசம் ஒப்படைக்கப்படும்; இத்தொகையை, பங்கு சந்தை யில் முதலீடுசெய்வர். அந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில், பணியாளர் ஓய்வு பெறும் போது, அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் உள்ள பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப் படும்.
இதன் காரணமாக, எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற இயலாது; பிடித்தம் செய்த தொகையை, பாதியில் பெற இயலாது என, பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன.எனவே, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; இக்குழு, சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசுப் பணியாளர் சங்கம்,அனைத்து ஆசிரியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, 'ஜேக்டோ, டேக்டோ' மற்றும் அரசு அலுவலர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர், உறுப்பினர்களிடம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி, மனுக்கள் அளித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை