Ad Code

Responsive Advertisement

நூற்றுக்கு நூறு எடுத்தால் பரிசு : அமைச்சர் வளர்மதி அறிவிப்பு.

''பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் பாடங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், 290 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், ஒரு கோடி ரூபாய் செலவில், நிலை உயர்த்தப்படும்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1,112 பள்ளி விடுதிகள்; 226 கல்லுாரி விடுதிகள். இவற்றில் தங்கி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, எட்டு லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்

கல்லுாரி விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின், ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித்திறனை வளர்க்க, இரண்டு கோடி ரூபாய் செலவில், பயிற்சி அளிக்கப்படும்

விடுதிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, பாய்களுக்கு பதிலாக, 25 லட்சம் ரூபாய் செலவில், ஜமக்காளம் வழங்கப்படும்

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொருபாடப்பிரிவிற்கும், தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement