''பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் பாடங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1,112 பள்ளி விடுதிகள்; 226 கல்லுாரி விடுதிகள். இவற்றில் தங்கி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, எட்டு லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்
கல்லுாரி விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின், ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித்திறனை வளர்க்க, இரண்டு கோடி ரூபாய் செலவில், பயிற்சி அளிக்கப்படும்
விடுதிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, பாய்களுக்கு பதிலாக, 25 லட்சம் ரூபாய் செலவில், ஜமக்காளம் வழங்கப்படும்
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொருபாடப்பிரிவிற்கும், தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை