புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் கடந்த 3–ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என குறுசெய்தி அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 2–ந் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட ஒருதரப்பு ஆசிரியர்கள்பள்ளியை திறந்து பாடம் நடத்தி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டதாக தெரிகிறது.
இதை கண்டித்தும், குறு செய்தியை எழுத்து பூர்வ உத்தரவாக வழங்க கோரியும், 3–ந்தேதி தேதி பள்ளி செயல்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட ஆசிரிய அமைப்புகள் அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், அலெக்சாண்டர் ஆகியோர் முன்பு அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை