ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள, 'ஜியோ' மொபைல் போன் சேவையில், அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளதால், போட்டி நிறுவனங்கள் கலங்கிப் போய், விலை குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. 'ஜியோ' இணைப்புகளை வாங்க, வாடிக்கையாளர்கள் முட்டி மோதுகின்றனர்.
சேவை பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை, செப்., 1ல், முகேஷ் அம்பானி வெளியிட்டதும், ஒரே நாளில் போட்டி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போட்டி நிறுவனங்கள், 'டிராய்' அமைப்பிடம் புகார் தெரிவித்தன. டிசம்பர், 31 வரை அழைப்புகள் இலவசம் என, அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த காலம் முடிந்ததும், 'எஸ்.டி.டி., லேண்ட் லைன், மொபைல்போன் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளும் எப்போதும் இலவசம்.
நெட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால், 'ஜியோ'வின் இலவச, 'சிம்'களுக்கு, வாடிக்கையாளர்களிடையே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதை வாங்க, வாடிக்கையாளர்கள் முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்து சுதாரித்த,'ஏர்டெல்' நிறுவனம், 'பிரீ -பெய்டு, இன்டர்நெட் டேட்டா' விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 'ஒரு ஜி.பி.,டேட்டா'வை, 265 ரூபாய்க்கு, 28 நாள் வேலிடிட்டியுடன் தந்த ஏர்டெல் நிறுவனம், நேற்று முதல், ஒரு ஜி.பி., '3ஜி, 4ஜி' டேட்டா'வை, 193 ரூபாய்க்கு தர துவங்கி உள்ளது. '2 ஜி.பி., பகல் மற்றும் இரவு டேட்டா பேக்கேஜின்' விலையை, 295 ரூபாயில் இருந்து, 228 ரூபாயாக குறைத்துள்ளது.
புதிய சலுகை : பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., ஒரு படி மேலே போய், மாதம், 300 ஜி.பி., வரை பயன்படுத்தும், 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' வாடிக்கையாளர்களுக்கு, 'ஒரு ஜி.பி.,' ஒரு ரூபாய்க்கு குறைவாக இருக்கும் வகையில், புதிய சலுகையை, வரும், 9ம் தேதி முதல் அளிக்க உள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்; இதுபோன்ற பல சலுகைகளை மற்ற நிறுவனங்களும் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைப்பு சாத்தியமா? : பொதுவாக, இன்டர்நெட் டேட்டாவுக்கு, 'பேக்கெட் சுவிட்ச்' மற்றும் குரல் அழைப்புகளுக்கு, 'சர்க்கியூட் சுவிட்ச்' என்ற தொழில்நுட்பங்களை, மொபைல் போன் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், 'ஜியோ'வில், அவை இரண்டிற்கும், 'பேக்கெட் சுவிட்ச்' என்ற தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.
'வி.ஓ.எல்.டி.இ., என்ற நவீன தொழில்நுட்பம் காரணமாக, ஒரு யூனிட் டேட்டா மூலம் கிடைக்கும் பயன், மற்ற நிறுவனங்களை விட அதிகமாக இருக்கும். இதற்கான கட்டமைப்பை பிரம்மாண்டமாக அமைத்துள்ளதால் விலை குறைவாக தர முடிகிறது. எதிர்காலத்தில், '5ஜி, 6ஜி' என, விரிவு படுத்துவதும் எளிதாகும்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை