பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், பெண் கல்வி திட்டக்கூறு சார்பில், கரூர்மாவட்டத்தில், 31 பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 மாணவியருக்கு, தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து, கராத்தே பயிற்சியாளர் ராமதாஸ் கூறியதாவது:
இதற்கு, ஒரு சில யுக்திகளை கையாண்டாலே, எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும். 'திகாத்' என்ற எதிர் தாக்குதல் கராத்தே பயிற்சி மூலம், அந்த யுக்திகளை கற்று கொடுக்கிறோம். ஒருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் வந்தால், எப்படி எதிர் தாக்குதல் நடத்துவது என்ற பயிற்சி அளிக்கப்படும்.எதிரிகளிடம் போராடும் போது, அவர்கள் உடலின் மென்மையான உறுப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். அப்போது, எதிரிகள் எளிதில் பயந்து ஓடி விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை