சென்னை: நடப்பாண்டில் புதிதாக, ஐந்து தாலுகாக்களை உருவாக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த, ஐந்து ஆண்டுகளில், ஒன்பது புதிய கோட்டங்களும், 65 புதிய தாலுகாக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு, கடலுார் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா; அரியலுார் மாவட்டத்தில், உடையார்பாளையம் தாலுகாவை பிரித்து, ஆண்டிமடம் தாலுகா உருவாக்கப்படும். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து, கூத்தாநல்லுார் தாலுகா; துாத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து, கயத்தார் தாலுகா; சிவகங்கை மாவட்டத்தில், திருப்பூர் தாலுகாவை பிரித்து, சிங்கம்புணரி தாலுகா உருவாக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை