உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் அக்.,3 ல் வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு இல்லாததால் போலி வாக்காளர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.சட்டசபை வாக்காளர்கள்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதால், வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணியில் செப்.,11 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் படி, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். (2017 ஜன., 1 ல் 18 வயது பூர்த்தி அடையும் விண்ணப்பங்கள் சேர்க்கப்படவில்லை). இப்பணி முடிந்து வாக்காளர் பட்டியல் விபரத்தை உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.
வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அக்., 3 ல் துணை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் புதிதாக பெறப்பட்ட வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களில் ஏராளமானோர் 25 வயதை கடந்தோராக உள்ளனர். கள விசாரணை இன்றி அவர்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு பகுதிகளில் பெயர் இருந்தாலும் கூட, தங்களுக்கு வேண்டியோர் போட்டியிடும் பகுதிகளில் போலி வாக்காளர்களாக சேர வாய்ப்பு உள்ளது.
தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பங்களை கம்யூட்டரில் ஏற்றி, 'சாப்ட்வேர்' மூலம் சரி பார்த் துள்ளோம். அதேபோல் ஏற்கனவே வேறு பகுதிகளில் பெயர் இருந்து, நீக்கல் சான்று இல்லாமல் கொடுத்தோரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம். இதனால் போலி வாக்காளர்கள் சேர வாய்ப்பில்லை, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை