வெப்பசலனம் நீடிப்பதால் தமிழகத்தில் மழைதொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று மானாமதுரை, தேவக்கோட்டை, செஞ்சி, புதுச்சேரி, மரக்காணம் 50 மிமீ மழை பெய்துள்ளது. செய்யூர், சிவகங்கை 30 மிமீ, திருச்சுழி, வானூர், திண்டிவனம், மன்னார்குடி 20மிமீ, தஞ்சாவூர், திருப்பூர், போளூர், பரமக்குடி, திருப்பத்தூர், திருமயம் 10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டது. புறநகரில் அதிகாலை முதல் சில இடங்களில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. அந்த க ா ற்றழுத்தம் அதே இடத்தில் நீடிப்பதாலும், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக உருவான வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி ஆகியவை காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும்.
அதிகபட்சமாக நேற்று மானாமதுரை, தேவக்கோட்டை, செஞ்சி, புதுச்சேரி, மரக்காணம் 50 மிமீ மழை பெய்துள்ளது. செய்யூர், சிவகங்கை 30 மிமீ, திருச்சுழி, வானூர், திண்டிவனம், மன்னார்குடி 20மிமீ, தஞ்சாவூர், திருப்பூர், போளூர், பரமக்குடி, திருப்பத்தூர், திருமயம் 10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டது. புறநகரில் அதிகாலை முதல் சில இடங்களில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. அந்த க ா ற்றழுத்தம் அதே இடத்தில் நீடிப்பதாலும், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக உருவான வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி ஆகியவை காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை