பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இதில் மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பாராலிம்பிக் போட்டியில் தங்கமும், வெண்கலப் பதக்கமும் வென்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தபடி உள்ளது. இதில், மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடியை பரிசாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல் பாராஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இருவருக்கும், பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
மேலும், தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கும் மத்திய அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
அதன்படி, தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசுத்தொகையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பதக்கம் வென்ற வீரர்களின் சாதனையைக் கண்டு பெருமைப்படுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்து உள்ளார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை