சிறந்தமுறையில் கல்வி கற்பிக்கும் நூறு ஆசிரியர்களின் வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். ' மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்காமல், பாடத்தை புதுமையான வழியில் கற்பிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்துகிறோம்' என்கின்றனர் ஆசிரியர்கள்.
மனப்பாடக் கல்வியாக இல்லாமல், மாணவர்களின் பங்களிப்போடு எடுக்கப்படும் பாடங்கள் அசர வைக்கின்றன. தனியார் பள்ளிகளோடு ஒப்பிட முடியாத அளவுக்குக் கற்பித்தல் திறனில் அசத்துகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர்கள் நடத்தும் இந்த வகுப்புகளை இணையதளத்தில் பதிவேற்றியதை உற்சாகமாக வரவேற்கிறார்கள் கல்வியாளர்கள்.
.

இவர்கள் மூலம், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் நவீன கற்றல் வகுப்பு முறைகளைக் கொண்டு செல்ல இருக்கிறோம். அதேபோல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை புரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை (tnschoolslive) அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கூகுள் ஆண்ட்ராய்டில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடம் புரியவில்லை என்றால், பாடத்தில் காட்டப்படும் படத்தின் மீது செல்போனை வைத்து ஸ்கேன் செய்தால், முப்பரிமாணத்தில் படத்தை பார்ப்பது மட்டுமல்லாமல், அது தொடர்பான எளிமையான விளக்கத்தையும் கேட்கலாம். பாடத்தை வெகு சுவாரஸ்யமாக கற்றுக் கொள்ளலாம்" என்கிறார்.
https://www.youtube.com/watch?time_continue=42&v=pmucT82V6us
-ஆ.விஜயானந்த்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை