கணவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி இலக்கியா தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். கல்வித் துறை
அலுவலர்கள் மற்றும் சூலக்கரை போலீஸார் அவரிடம் சமரசம் செய்து முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிடுமாறு கூறினர்.
இதுகுறித்து ஆசிரியர் சரவணன் கூறியதாவது:
பள்ளியில் இருக்கும் சில ஆசிரியர்களின் தூண்டுதலின்பேரில் என்னை இடமாற்றம் செய்துள்ளனர். மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
அதில், நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தற்போது இடமாறுதல் செய்துள்ளனர். நரிக்குடி பள்ளியிலிருந்து ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் நான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்
என்றார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது:
சரவணன் மீது சக ஆசிரியர்கள் மட்டுமல்லாது கிராம மக்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையிலே அவரை இடமாறுதல் செய்தோம். இடமாறுதல் கலந்தாய்வில் அவர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை