Ad Code

Responsive Advertisement

சென்னை பல்கலையில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

சென்னை பல்கலையின், 125 இணைப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலையின் நேரடி மாணவர்களுக்கு, சிறப்பு குறைதீர் முகாம், பல்கலை வளாகத்தில் நாளை நடக்கிறது. தொலைநிலை கல்வி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், பல்கலையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

அதற்கு முன்குறை தொடர்பாக, பல்கலையின் இணையதளத்தில் பதிவு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மாணவர்கள் நேரடியாக முகாமுக்கு வந்து, சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், சிக்கல்கள், மாணவர் சேர்க்கையிலுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement