சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றார் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் அறிவொளி.
இதற்கு ஆசிரியர்களின் பங்கு அதிகமாகும். 100% தேர்ச்சி அடைவதில் நாம் அதிக அக்கறை எடுத்து கொள்வதுபோல், தலைமை ஆசிரியராக நீங்கள் உங்கள் பள்ளியில் சக ஆசிரியர்களோடு கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வகுப்பறையில் நீங்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்.சமுதாயத்தில் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டால்தான், ஒரு பள்ளி சிறந்த பள்ளியென பெயர் எடுக்க முடியும் என்றார் அவர்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந. மாரிமுத்து தலைமை வகித்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி துணை இயக்குநர் குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஜம்புலிங்கம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கமணி, செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை