அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி, அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழகம் எதிர்ப்பு : இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. விவாதத்தின்போது, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,'' என்றார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும், இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள், மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை