அரசு பள்ளியில், மாணவனின் முதுகில் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னுார் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். வகுப்பில், தமிழாசிரியர் மாரப்பன், பிரவீன்குமார் முதுகில் அமர்ந்து, பாடம் நடத்தியதாக அவரது தாயார் பரிமளா, கலெக்டரிடம் புகார் அளித்தார்.
கடந்த, 29ம் தேதி ஆசிரியரையும், தலைமை ஆசிரியரையும் சந்தித்து பேசினோம். 'உங்கள் மகனைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. முகத்தை பார்த்தாலே கோபம் வருகிறது. வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்; கடும் மன உளைச்சல் ஏற்படுத்துகிறான்' என்று ஆசிரியர் மாரப்பன் கூறுகிறார்.
எங்களைப் போன்ற ஏழைகளுக்கு அரசு பள்ளி தான், அடைக்கலம் கொடுக்கிறது. அங்கு வரும் மாணவர்களுக்கு, நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, நன்கு படிக்க வைக்க வேண்டிய ஆசிரியர்கள், இதுபோல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் நேருவிடம் கேட்டதற்கு, 'ஆசிரியர் மாரப்பன், பிரவீன்குமார் மற்றும் அவரது பெற்றோரை, தனித்தனியாக விசாரித்தேன். வகுப்பிலுள்ள, 44 மாணவர்களிடம் விசாரணை நடத்தினோம். விசாரணையில், புகார் உண்மையில்லை என தெரிந்தது. மாணவன் குறும்பு செய்ததால் கண்டித்துள்ளார். ஒரு ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்து, சிறு சிறு தண்டனைகளை மட்டுமே அவர் கொடுத்துள்ளார்' என்றார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில், ''இப்பிரச்னை குறித்து எனக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், மாணவன், பெற்றோர், ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தி, அதன் பின், உண்மை நிலவரத்தை தெரிந்து, நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை