தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கானபணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளியில் 2015 செப்.,௧ அன்று மாணவர் எண்ணிக்கை அல்லது 2016 ஆக.,௧ அன்று உள்ள மாணவர் எண்ணிக்கையில் எது அதிகமோ, அதன்படி ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்; இதில் 'சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கிடுவர். பணியில் இளைய ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்பது விதி. இவ்விதி மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறும் ஆசிரியர்கள் (டிப்ளாயிமென்ட் சர்பிளஸ்) கலந்தாய்விலும் விதிகளை தளர்த்தி முடிவு எடுக்கப்பட்டதாக, ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சைகள் எழும். 'விதிமீறியது தெரியவந்தால் கல்வி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் மந்தம்: இயக்குனர் உத்தரவுப்படி தேனி, விருதுநகர், நெல்லை உட்பட மாவட்டங்களில் ஆக.,13ல் பணிநிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல் விபரம், ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'மதுரை உட்பட சில மாவட்டங்களில் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை' என தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை