வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப்.1) முதல் வைக்கப்படுகிறது.
சிறப்பு முகாம்கள்:
வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம்.மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும்.
சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
என்ன படிவம்... எந்த ஆவணம்?
முதல் முறையாகப் பெயர் சேர்க்கவும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 6.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட விரும்பினால் படிவம் 6ஏ.
ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க படிவம் 7.
பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்யவிரும்பினால் படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.
இருப்பிடச் சான்றாக ஆறு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும். வங்கி-கிசான்-அஞ்சல் அலுவலக நடப்புக் கணக்குக் கையேடு. விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை-கடவுச் சீட்டு-ஓட்டுநர் உரிமம்-வருமான வரி விதிப்பு ஆணை.விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது.
விண்ணப்பப் படிவத்தில் கொடுத்துள்ள முகவரியில் விண்ணப்பதாரரின் பெயருக்கு வந்து சேர்ந்த தபால் துறையின் தபால்கள்.வாடகை ஒப்பந்தம்.ஆதார் கடிதம்.இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடம் (வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதி), வாக்குச் சாவடி நிலை அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் அளிக்கலாம்.www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை