தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போலவேலை வாங்கிவருகின்றனர்.
ஆனால், அவர்களை வாரத்தில் மூன்று முழு நாட்களும் பள்ளி தலைமைஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி பணியாற்ற வைக்கின்றனர். இதுதவிர, பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளையும் சிறப்பு ஆசிரியர்களையே செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் வழக்கமான பள்ளி ஆசிரியர்களுக்காக, கல்வித்துறை நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு, பள்ளியில் இருந்து சென்றதாக ஆள் கணக்கு காட்டவும், சிறப்பு ஆசிரியர்கள்அனுப்பப்படுகின்றனர். பள்ளிக்கு புத்தகம் வாங்குவது, சீருடைகள் வாங்குவது என மற்ற பணிகளுக்கும் சிறப்பு ஆசிரியர்களே அனுப்பப்படுகின்றனர். இதற்காக, அவர்களுக்கு தனியாக போக்குவரத்து படி ஏதும் கொடுக்கப்படுவதில்லை.
தமிழக அரசு, தங்களை என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில், தலைமை ஆசிரியர்கள், தங்களை கொத்தடிமை போல் வேலை வாங்குவதை சகித்து கொண்டுபணியாற்றி வருகின்றனர். ஆகவே, அரசு விதிகளின்படி வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் தங்களுக்கு பணிவழங்க, கல்வித்துறை கண்டிப்பாக உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என, அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை