நடப்பாண்டு, 6.21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 2014 - 15ம் ஆண்டு, 4.23 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, 148.82 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 1.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, ஆதிதிராவிட மாணவ,மாணவியரையும் சேர்த்து, 3.49 லட்சம் மாணவியர்; 2.71 லட்சம் மாணவர்கள் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை