தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு விருது பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது.
இன்று அல்லது நாளை இந்த பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. விருதுகள் செப்டம்பர் 5ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடக்கும் விழாவில் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த விழாவிற்கான அழைப்பிதழில் பள்ளி கல்வி துறை அமை ச்சர் பென்ஜமின் பெயர் அச்சி டப்பட்டு இருந்தது நேற்று இத்துறை அமைச்சர் மாற்றப் பட்டதால் தற்போது மாபா. பாண்டியராஜன் வழங்குவார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை