மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாடவாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி ஆகஸ்டு 17 (இன்று) முதல் 23-ம் தேதி வரை ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மாவட்டத்துக்கு தலா 3 பேர் வீதமும், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 2 பாடங்களுக்கும் சேர்த்து 3 பேர் என்ற வீதமும் கலந்துகொள்வர். முதன்மை கருத்தாளர் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பின்னர் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இவ்வாறு 27 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை