ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கும். பணியிட மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 1 ஆண்டாவது பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
அதாவது, பதவி உயர்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றவர்கள் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும் கடந்த ஆண்டு வரை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான விதியில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பதவி உயர்வு பெற்றவர்களும் குறிப்பிட்ட பணியிடத்தில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றி இருந்தால் தான் மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை