Ad Code

Responsive Advertisement

மாணவர் பேரவைத் தேர்தலிலும் "நோட்டா': யுஜிசி அறிவுறுத்தல்

பல்கலைக்கழக, கல்லூரிகளில் நடத்தப்படும் மாணவர் பேரவைத் தேர்தல்களிலும் "நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பிரிவைச் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து லிங்க்டன் குழு பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த அவ்வப்போது தேவையான அறிவுறுத்தல்களை யுஜிசி வழங்கி வருகிறது.

அந்த வகையில், மாணவர் பேரவைத் தேர்தலின்போது, "நோட்டா' என்ற பிரிவையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகங்கள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement