குழந்தைகளின் நடத்தை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில், சமூக வலைதளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
எதிர்ப்பு
பிரிட்டனில் எட்பாஸ்டன் நகரில் உள்ள பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் 15 சதவீத பெற்றோர்கள் மட்டுமே, சமூக வலைதளங்கள் குழந்தைகளின் சிந்தனை மற்றும் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது என தெரிவித்தனர்.
40 சதவீத பெற்றோர்கள் இது முக்கியமான பிரச்னை, சமூக வலைதளங்களால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். 24 சதவீத பெற்றோர்கள், குழந்தைகளிடம் நாம் தான் அதை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என புரிய வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
93 சதவீதம்
மேலும் 11 முதல் 17 வயது குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துகின்றனரா என 1,700 பெற்றோர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 93 சதவீத பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தினமும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என பதிலளித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை