மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உட்பட, 11 வகை பள்ளி நிர்வாக விதிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன; இதற்கான வரைவு அறிக்கை தயாராகியுள்ளது. நாட்டிலுள்ள எந்த மாநிலத்தி லும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டுமே பல வகையான பாடத்திட்டங்களும், கல்வி நிறுவன விதிகளும் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னை கல்வி சட்டம் உருவாக்கப்பட்டது; அதில் பல வகையான விதிகள் உள்ளன.
பல பாடத்திட்டங்களை, இந்த பள்ளிகள் பின்பற்றிய நிலையில், 2011ல், அனைத்து பாடத்திட்டங்களும் இணைக்கப்பட்டு, சமச்சீர் கல்வி அறிமுகமானது; ஆனாலும், பள்ளிகளின் விதிகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், பா.ம.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க உத்தரவிட்டது. இதற்காக, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ஆளுடையபிள்ளை தலைமையில், பள்ளிக் கல்வி செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தி, 11 வகை விதிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்தது. இப்போது, முதல்கட்ட வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் சில மாற்றங்களை செய்து, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில், இந்த பணியை முடிக்க,
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை