ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் "சட்ட அலுவலர்' என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அடிப்படை பணியில் 18 ஆண்டுகளாக தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் தேக்கநிலை ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பதவி உயர்விலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வின் போது 3 சதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) பணியிடம் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் செ.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சா.செந்தமிழ்ச்செல்வன், பொருளர் கு.ராகவேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் பெ.முனுசாமி நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை