அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
அதன்படி, மாநில அளவில் ஜூலை 7-இல் புத்தாக்கப் பயிற்சியும், 19-இல் தொடர் மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சியும், 11-இல் மாவட்ட வாரியாக அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், ஆசிரியர் கருத்தாளர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியும், 25-இல் வலுவூட்டல் பயிற்சியும், 16-இல் அனைத்துத் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் நடுநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை