நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில். அமைச்சர் பேசியதாவது:- வருவாயைப் பெருக்கிட அனைத்துப் பேருந்துகளையும் சிறப்பாகப் பராமரித்து சரியான நேரத்தில், பயணிகளின் தேவைக்கேற்பஇயக்க வேண்டும்.வழித்தட முறிவு இல்லாமல் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்.நிகழ் கல்வி ஆண்டுக்கான இலவச பயண அட்டையை ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு:
முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின்தான் பேருந்துகளை வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க வேண்டும்.உரிய அனுமதி பெறப்பட்டு நிலுவையில் இருக்கும் கூண்டு கட்டப்படாத பேருந்துகளுக்கு ஜூலை 31-க்குள் கூண்டு கட்ட விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.விபத்துகளைத் தவிர்க்க, ஒட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதிய பணிமனைகளின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழக முதல்வர் அறிவித்துள்ள நலத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் தொழில்-போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சி.வி.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை