சென்னை அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், அனைத்து பாடப்பிரிவுகளும் நிரம்பிவிட்டன. ஒரு வாரத்தில், 20 ஆயிரம் பேர், பி.இ., - பி.டெக்., பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்ஜி., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங், ஜூன், 27ல், அண்ணா பல்கலையில் துவங்கியது.
இதில், முதல் நாளில் இருந்தே அண்ணா பல்கலையின், மூன்று கல்லுாரிகளில் சேர மாணவர் போட்டி போட்டனர். முதலில், இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' மற்றும் கம்யூ., சயின்ஸ் துறைக்கு அதிக மாணவர்கள் முன்னுரிமை கொடுத்தனர். நேற்று மாலை நிலவரப்படி, அண்ணா பல்கலையின் பிரிவுகளான கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி போன்றவற்றில், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் படிப்புகள் நிரம்பிவிட்டன. பொது கவுன்சிலிங் துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், 30 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு, அவற்றில், 22 ஆயிரம் பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை