'ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு ஜாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு, பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி பெயர் குறிப்பிடாமல், தமிழர் அல்லது இந்தியர் என குறிப்பிட வேண்டும். கலப்பு திருமணம் என்பதை, 'ஜாதி மறுப்பு திருமணம்' என, அரசு குறிப்பேட்டில் குறிப்பிட வேண்டும்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி கழகமான, 'தாட்கோ' மூலம், 10 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு வேலைக்கான வயது வரம்பு, 45 வயது என, நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை