பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த ஆண்டு மாறுமா? தமிழக அரசு பரிசீலனை
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 9 வருடங்கள் ஆகின்றன.
வரைவு பாடத்திட்டம் ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த 3 ஆசிரியர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. பிளஸ்-1 பாடத்திற்கு 18 தலைப்புகளிலும், பிளஸ்-2 பாடத்திற்கு 18 தலைப்புகளிலும் வரைவுப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்பதற்காக மாவட்ட தலைநகரங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் சிறந்த ஆலோசனைகளும், கருத்தும் ஏற்கப்பட்டன.
அந்த வரைவுப்பாடத்திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. அந்த கருத்துக்களில் தேவையானவை ஏற்கப்பட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசு பரிசீலனை இப்போதைய பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் மாறினால் 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை