சத்துணவுத் திட்டத்தின்கீழ் 55 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருமண உதவித் திட்டம்:
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பட்டதாரி ஏழைப் பெண்கள் பயன்பெற வழங்கப்பட்ட 4 கிராம் தங்கம் தற்போது 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.703 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தொட்டில் குழந்தை திட்டம்: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம்ஆகியவற்றுக்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.141 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.சத்துணவுத் திட்டம்: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 55 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமிக்க கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.முதியோர் உதவித்தொகை: முதியோர்கள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.இதற்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.3,820 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கென, திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டின்படி ரூ.4,512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை