
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள பாளையம்
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி க/பெ ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழ்நாடு காவலர்கள் ஒருங்கிணைந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பை அனைத்து பிரிவினருக்கும் (OC/BC/BCM/MBC/SC/SCA/ST) மூன்று (3) ஆண்டுகள்
உயர்த்த வேண்டுமென முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (TN CM SPECIAL CELL) அனுப்பிய கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு காவல் துறையில் GR.2,POLICE CONSTABLE
ஆட்கள் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அதனால் தமிழகத்திலுள்ள
பல்லாயிரம் இளைஞர்களின் காவலராகும் கனவு நிறைவேறவில்லை. அவர்களில்
பெரும்பான்மையோர் காவலர்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதை
தாண்டிவிட்டதால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக உள்ளனர். எனவே
இனி வரும் தமிழ்நாடு அரசின் காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது
தகுதியை (வயது வரம்பை) அனைத்து பிரிவினருக்கும் மூன்று ஆண்டுகள் உயர்த்தி
வழங்க வேண்டும்.அதாவது OCக்கு 18லிருந்து24வரை உள்ள வயதை 18லிருந்து27
ஆகவும் , BC/BCM/MBCக்கு 18லிருந்து26வரை உள்ள வயதை 18லிருந்து29 ஆகவும்
, SC/STக்கு 18லிருந்து29வரை உள்ள வயதை 18லிருந்து32 ஆகவும் , உயர்த்தி
வழங்க உத்தரவிட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அம்மாவை இருகரம் கூப்பி
வணங்குகிறேன்.அவ்வாறு உயர்த்துவதால் இளைஞர்களின் வாழக்கையிலும்
,அவர்களின் குடும்பங்களிலும் ஒளியேற்றப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை