அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதிவழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தரப்படுகின்றன.
அரசின் நிதியில், ஆசிரியர்களுக்கான சம்பளமும் தரப்படுகிறது. ஆனால், சில, அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், நன்கொடை மற்றும் பலவித கட்டணங்கள் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு, ரசீதும் தருவதில்லை.
குறிப்பாக, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த வசூல் வேட்டை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், நேற்றுசெய்தி வெளியானதும், பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.திடீர் ஆய்வு நடத்தவும், புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனினும், இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலகம் மற்றும் இயக்குனர் அலுவலத்தில் இருந்து, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை