பள்ளிகளில், காலை சிற்றுண்டி சமைப்பது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசு உத்தரவு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில், வாரத்தில், ஐந்து நாட்களுக்கு சத்தான ஆகாரமாக, சம்பா ரவை உப்புமா, சப்பாத்தி, ஜவ்வரிசி கஞ்சி, 'வெஜிடபுள்' கிச்சடி வழங்குவது குறித்து, ஆலோசனை கூட்டம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தலைமையில் நடந்தது. இதுகுறித்து, சத்துணவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மொத்தம், 26 லட்சம் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, சென்னை நகரில், ஐந்து பள்ளிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி அளிக்க, பிரபல ஓட்டலில் பணிபுரியும் முதன்மை சமையல் கலைஞரை அழைக்க உள்ளோம். மற்ற மாவட்டங்களிலும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை