Ad Code

Responsive Advertisement

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பட்-டைய கிளப்-புது புதிய 'செயலி'

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் செய்ய புதிய, 'செயலி' (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு, தமி-ழகம் முழு-வதும், 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 'சைல்டு வாய்ஸ்' என்ற அமைப்பு செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை திருமணம் போன்ற அவ-லங்-க-ளுக்கு எதி-ராக, இந்த அமைப்-பு போராடி வருகிறது.இந்த அமைப்-புடன் அருணோதயா, வேர்கள், ஜீவஜோதி, வைகை டிரஸ்ட், காருண்யா காப்பகம், புகையிலைக்கு எதிராக குழந்தைகளை காத்தல் போன்ற அமைப்புகள் இணைந்து, சி.ஆர்.எம்., (சைல்டு ரைட்ஸ் மானிட்டர்), 'செயலியை' உருவாக்கின. இச்செயலியில் உறுப்பினராகி, டி.ஜி.பி., அலுவ-ல-கம், குழந்தைகளுக்கான, 'ஹெல்ப் லைன்' (1098), குழந்தைகள் நல வாரியம், மாநில குழந்தைகள் நல காப்பகம் ஆகி-ய-வற்றுக்-கு புகார்களை தெரி-விக்க முடி-யும்.இதன்- மூலம் அந்-தந்-த மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கள் நடவடிக்கை எடுப்பர். இச்செயலி மூலம் புகார் கொடுத்து, தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.



'சைல்டு வாய்ஸ்' நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை கூறியதாவது: இச்செயலி மூலம் புகார்கள் மாநில தலைமை இடத்திற்கு செல்வதால், மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இச்செயலியை, 'யுனிசெப்'பின் தமிழக அதிகாரி, கடந்த பிப்ரவரியில் துவக்கி வைத்தார். புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தவறானதகவல்கள் கொடுத்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement