செயல்திட்ட வழி கற்றல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பா.மேக்டலின் பிரேமலதா இம்முறையில்தான் தனது மாணவர்களுக்கு அனுபவக் கல்வியைக் கற்றுத்தருகிறார்.
பிரேமலதா தயாரித்துத் தந்திருந்த கேள்விகளை எடுத்துக்கொண்டு களத்துக்குச் சென்று பார்த்து ஆய்வறிக்கையை மாணவர்கள் சமர்ப்பித்தார்கள். இவர்களுடைய முயற்சியால், 9 பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்குப் பயணப்பட்டார்கள்.
அடுத்து, ‘புகையிலை பயன்பாட்டின் தீமைகள்’ என்ற தலைப்பில் ஒரு கிராமத்தில் ஆய்வு நடத்த, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் புகையிலையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டார்கள்.
“புகையிலைப் பொருட்களை யாருக்கும் வாங்கித்தர மாட்டோம்” என இன்றைக்கும் இறைவழிபாட்டின்போது உறுதிமொழி எடுக்கிறார்கள் இந்தப் பள்ளியின் மாணவர்கள். இப்படிப் பல விஷயங்கள்!
புரிந்து படித்தால்…
“தியரியாகக் கொடுப்பதைவிட நேரடிச் செயல்திட்டமாகக் கொடுத்தால் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை மாணவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள். நினைவாற்றலால் படித்ததை அப்படியே எழுதிவிடலாம். பாடத்தை எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை செயல்திட்ட வழி கற்றல் முறையில்தான் தெரிந்துகொள்ள முடியும்” என்கிறார் மேக்டலின் பிரேமலதா.
தொடர்புக்கு: 94435 54078

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை