திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் திடீரென சென்றார்.
அங்கு ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் முருகேசன் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது. சக ஆசிரியர்களிடம் விசாரித்ததில், கடந்த நான்கு நாட்களாக பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதையடுத்து, வருகை பதிவேட்டில் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வருகை தந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேரடியாக சென்று அவரிடம் முறையிட்டனர்,
அவர்கள் கூறுகையில், 'தலைமை ஆசிரியர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை, பாடமும் நடத்தவில்லை. எங்கள் குழந்தைகளை வேறு கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம்' என்று கூறினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் கூறுகையில், 'பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து உங்கள் குழந்தைகளை இதே பள்ளியில் படிக்க வையுங்கள்' என்று கூறிவிட்டு சென்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை