Ad Code

Responsive Advertisement

28ம் தேதி முதல் ரூ.251 ஸ்மார்ட்போன் விநியோகம்

வரும்(ஜூன் மாதம்) 28ம் தேதி முதல் ரூ.251 விலையிலான 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் 'பிரீடம் 251' என்ற பெயரில் ரூ.251க்கு மலிவுவிலை ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்ததது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்ததை தொடர்ந்து, மத்திய அரசு விசாரணை வட்டத்தில் இந்நிறுவனம் தற்போது உள்ளது.



இந்நிலையில் ரிங்கிங் பெல் நிறுவனத்தின் இயக்குநர் மோஹித் கோயல் கூறியதாவது: வரும் 28ம் தேதி முதல் 251 ரூபாய்க்கு 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும். முதற்கட்டமாக முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



7 கோடி பேர் கேஷ் ஆன் டெலிவரி வகையிலும், 30 ஆயிரம் பேர் பணம் கொடுத்தும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement