Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி, விண்ணப்பித்த மாணவர்கள் புதன்கிழமை (ஜூன் 1) முதல் பதிவிறக்கம் செய்யலாம். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
 

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் scan.tndge.in என்ற இணையதள முகவரியில், ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 


அதைத் தொடர்ந்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling Revaluation என்ற இணைப்பைத் தேர்வு செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
 


இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 3, 4-ஆம் தேதிகளில் மாலை 5 மணிக்குள் தங்களின் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
 


மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement