அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பதுதெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்குஎச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான, 'கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலின் படி, 191 கல்லுாரிகளின் தேர்ச்சி விகிதம், 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த கல்லுாரிகளில் படித்து, தோல்வி அடைந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதேநிலை நீடித்தால், பல லட்சம் செலவு செய்து படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
எனவே, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், தேவையான பேராசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, அந்த கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை எச்சரிக்கை கடிதம் அனுப்ப உள்ளது.அதன் பின்னும் கல்வித் தரம் குறைந்தால், அந்த கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை