ஈரோடு மாவட்டம் பெருந்துறை பரப்புரைக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன் முதல்பிரதியை நாடாளுமன்ற துணை சாபநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.
தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் தனித்தனியான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்..
* அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் ரூ.40 லட்சம் வழங்கப்படும்..
* சத்துணவில் காலை சிற்றுண்டி வழங்கப்படும்..
* கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் வழங்கவேண்டிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்
* அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் ரூ.40 லட்சம் வழங்கப்படும்..
* சத்துணவில் காலை சிற்றுண்டி வழங்கப்படும்..
* கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் வழங்கவேண்டிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்
* தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதரார்களுக்கும் விலையில்லா கைபேசி
* தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்க நடவடிக்கை
* மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம்
* பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை
* 2016-2021 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
* மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம்
* பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்புள்ள ஆப்டெக்ஸ் கூப்பன்
* ஏழை எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெற அம்மா வங்கி அட்டை வழங்கப்படும்
*காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை
* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்
* மீனவர்களுக்கு தனி வீடு, மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
* மீன்பதன பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது
* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்
* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்
*மகப்பேறு உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்
* முல்லைப் பெரியாறு அணி 152 அடியாக உயர்த்தப்படும்
* மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய சேவை
* நூறு யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் கட்டணமில்லை
* வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை