தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் 23ம் தேதி தேர்தல் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார். தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தெரிய வந்ததும், அதற்கு தேர்தலை ஒத்திவைப்பது ஒரு வழிமுறையாகாது என்றும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கருத்தை வலியுறுத்தி, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பாஸ்கரன், தஞ்சை பாஜக வேட்பாளர் ராமலிங்கம், அரவக்குறிச்சி வாக்காளர் தனசேகரன், திருஞானசம்பந்தர் என்ற மூத்த வழக்குரைஞர், திருநெல்வேலியைச் சேர்ந்த யோகம், தங்கராஜ் உட்பட 5 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறாது என்று நீதிபதிகள் அறைக்குச் சென்ற தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார். இந்த தகவலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை இன்று மாலை நீதிமன்ற அமர்வு முன்பு வரும் போது இதனை தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். பணப்பட்டுவாடா நடந்தது தெரிய வந்தால் வேட்பாளரை மாற்ற வேண்டும். அதற்கு கட்சிகளுக்கு அவகாசம், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மனு தாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் வீடியோ கான்பரன்சிங்கில் பேசினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு தான் இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை